கடந்த, 2014ல் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை நம் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளியை காஷ்மீரின் கார்கிலில் கொண்டாடினார்.
நாட்டின் பிரதமராக, 2014ல் மோடி பொறுப்பேற்ற பின் வந்த முதல் தீபாவளியை இமயமலையில் உள்ள உலகின் மிக உயர்ந்த போர் களமான சியாச்சின் பனிமலை சிகரத்தில் வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடினார். அதற்கு அடுத்த ஆண்டு, 2015ல் பஞ்சாப் எல்லையில் வீரர்களுடன் கொண்டாடினார்.
கார்கிலில் தீபாவளி கொண்டாடினார் பிரதமர் மோடி
2016ல், ஹிமாச்சல பிரதேசத்தில் இந்தோ - திபெத் எல்லை போலீசாருடனும், 2017ல், ஜம்மு - காஷ்மீர், பந்தி போராவிலும், 2018ல், உத்தரகண்டின் ஹர்சில் என்ற இடத்திலும், 2019ல் ஜம்மு - காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியான ரஜவுரியிலும், 2020ல் ராஜஸ்தானின் ஜெய்சால்மரிலும், 2021ல் ஜம்முவின் நவ்ஷேராவிலும் தீபாவளியை ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பிரதமர் கொண்டாடினார்.
0 Comments