"வந்தே பாரத்" எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi inaugurated the "Vande Bharat" Express train service
குஜராத் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, காந்திநகர் - மும்பை வழித்தடத்தில் நவீன வசதிகளுடன் கட்டுமானம் செய்யப்பட்டுள்ள "வந்தே பாரத்" எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தொடங்கி வைத்தார்.
காந்திநகர் ரயில் நிலையத்தில் கொடியசைத்து, இந்த சேவையை தொடங்கிவைத்த மோடி, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்தார்.
இணையதள சேவைகளுக்கான வை-பை (WI-FI) உள்ளிட்ட பல வசதிகளை கொண்ட "வந்தே பாரத்" ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள பெரம்பூர் ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் கட்டப்பட்டவை.
0 Comments