மத்திய நிதி அமைச்சகத்தில் 2007 - 2009 வரை தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய அர்விந்த் விர்மானியை நிடி ஆயோக் முழுநேர உறுப்பினராக நியமிக்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து அவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மறு உத்தரவு வரும் வரையில் விர்மானி இந்த பதவியை வகிப்பார்.
ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குறித்த தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில், 2013 - 2016 வரை பணியாற்றிய அர்விந்த் விர்மானி, சர்வதேச நிதியத்தில் 2012 வரை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
0 Comments