பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் 3-வது அமர்வை பிரதமர் தொடங்கி வைத்தார் / The Prime Minister inaugurated the 3rd session of the National Platform for Disaster Risk Reduction
பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் 3-வது அமர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த 3-வது நிகழ்வின் முக்கிய கருப்பொருள் "மாறிவரும் பருவநிலையில் உள்ளூர் விரிவாற்றலைக் கட்டமைத்தல்" ஆகும்.
இந்த நிகழ்வின் போது, சுபாஷ் சந்திரபோஸ் மேலாண்மை விருது பெற்றவர்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். 2023- புரஸ்கார் விருது வென்றவர்கள்: ஒடிசா மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மிசோரமின் லுங்கிலி தீயணைப்பு நிலையம் ஆகும்.
மேலும் பேரிடர் ஆபத்து குறைத்தல் துறையில் புத்தாக்க சிந்தனைகள், முன்முயற்சிகள், கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
என்பிடிஆர்ஆர் எனப்படும் பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசியத் தளம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மீட்புத் தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளவும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும், ஆலோசனைகளைத் தெரிவிக்கவும் செயல்திட்ட அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொள்ளவும் இது வகை செய்கிறது.
0 Comments