எலான் மஸ்க் தனது ட்விட்டர் நிறுவனத்துல்ல புதிய சிஇஓவை நியமித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டா் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, அக்டோபா் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றாா்.
இதைத் தொடா்ந்து பணியாளா்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சா்ச்சைக்குள்ளானது.
இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ பொறுப்பேற்க உள்ளார் என எலான் மஸ்க் தெரிவித்தார்.
0 Comments