சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறும் வேளாண் வணிகத் திருவிழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இங்கு 86 அரங்குகளில் 188 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருட் களும், 90 அரங்குகளில் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகள், அமைப்புகள் சார்ந்த கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட தின்பண்டங்கள் உள்ளிட்டவை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வணிகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்கங்களும் நடைபெறுகின்றன. வாங்குபவர்- விற்பனையாளர் சந்திப்பும் நடைபெற உள்ளது.
முன்னதாக வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருதுகளை முதல்வர் வழங்கினார்.
0 Comments