Recent Post

6/recent/ticker-posts

ராமநாதபுரத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் - முதல்வர் தொடங்கிவைத்தார் / One Crore Tree Saplings Plantation Program in Ramanathapuram - Chief Minister launched

  • தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ அன்று (18.8.2023) இராமநாதபுரம்‌ ஆய்வு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, இராமநாதபுரம்‌ மாவட்டத்தில்‌ பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்‌ கீழ்‌ ஒரு கோடி மரக்கன்றுகள்‌ நடும்‌ திட்டத்தினை பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார்‌. 
  • முதலமைச்சர்‌ அவர்களின்‌ கனவு திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கம்‌ மூலம்‌ வனப்‌ பரப்பினை அதிகரிக்கும்‌ நோக்கத்தோடு இராமநாதபுரம்‌ மாவட்டத்தில்‌ ஒரு கோடி மரக்கன்றுகள்‌ உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு பல்வேறு துறைகளின்‌ மூலம்‌ மாவட்டம்‌ முழுவதும்‌ வளர்க்கப்பட்டு வருகிறது. 
  • பெருநெல்லி, வாகை, மூங்கில்‌, ஆலமரம்‌, அரசமரம்‌, அத்தி, விளாம்பழம்‌, ஆவிமரம்‌, கொடுக்கப்புளி. புங்கன்‌, வன்னி, கொய்யா, பூவரசு போன்ற மரக்கன்றுகள்‌ உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 
  • அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்‌ இராமநாதபுரம்‌ மாவட்டத்தில்‌ ஒரு கோடி மரக்கன்றுகள்‌ நடவு செய்யும்‌ பணி நிறைவு செய்யப்படும்‌.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel