Recent Post

6/recent/ticker-posts

குடியரசுத்தலைவர் மாளிகையில் ஆளுநர்கள் மாநாட்டை குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார் / The President inaugurated the Governors' Conference at the Presidential Palace

குடியரசுத்தலைவர் மாளிகையில் ஆளுநர்கள் மாநாட்டை குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார் / The President inaugurated the Governors' Conference at the Presidential Palace

புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் ஆளுநர்கள் மாநாட்டை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 2, 2024) தொடங்கி வைத்தார். 

மத்திய-மாநில உறவுகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், சாதாரண மக்களுக்கான நலத்திட்டங்களை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் பரந்த அளவிலான பிரச்சினைகளை இந்த மாநாடு விவாதிக்கும்.

மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய குடியரசுத்தலைவர், இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் நமது தேசிய இலக்குகளை அடைவதற்கு தீர்க்கமான விடயங்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆளுநர்களின் துணைக் குழுக்கள் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல் குறித்தும் விவாதிக்கும் அமர்வுகளை நடத்தும் வகையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஆளுநர்கள் தவிர, மத்திய அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் அதிகாரிகளும் இந்த அமர்வுகளில் கலந்து கொள்வார்கள். 

துணைக் குழுக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் நாளை (ஆகஸ்ட் 3, 2024) நிறைவு அமர்வின் போது குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் முன் சமர்ப்பிக்கப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel