விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் 3,300-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்நிலையில் தற்போது இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு பணியின் போது அலங்காரப் பொருட்களை மெருகேற்றி பாலிஷ் போடவும், வீட்டில் தரைத் தளத்தை சமப்படுத்த பயன்படும் மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
0 Comments