தமிழ்நாடு அரசின் மாநில பட்ஜெட் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை சட்டமன்றத்தில் 2025-2026ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில், பட்ஜெட்டிற்கான லச்சினையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், ரூபாயைக் குறிக்கும் தேவநாகரி எழுத்தான '₹' என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தான 'ரூ' எனும் எழுத்தை பயன்படுத்தி லச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments