பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரூ.22,919 கோடி நிதி உதவியுடன் மின்னணுப் பொருட்கள் வழங்கல் தொடரில் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான மின்னணு சாதனங்கள் உற்பத்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
திறன் மேம்பாடு, உலகளாவிய மதிப்புத் தொடருடன் இந்திய நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு மதிப்புக் கூடுதலை அதிகரித்து, மின்னணு சாதன உற்பத்தி சூழலில் பெருமளவு முதலீடுகளை (உலகளாவிய / உள்நாட்டு) ஈர்க்கும் வகையில், வலுவான உபகரண சூழல் அமைப்பை உருவாக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
0 Comments